
கொழும்பு, ஏப் 15
காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் வெள்ளிக்கிழமை 7 வது நாளாக முனைப்புப் பெற்றுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்பிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இவரால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அர்ஜுன ரணதுங்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சமூகமளித்துள்ளார்.