யாழ்ப்பாணம்,ஏப் 15
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாட்டில், நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ சுமந்திரன், தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

