மன்னார் கள்ளியடிப்பகுதியில் வசிக்கும் வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
மேலும் கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.
மேலும் இதன் பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும் சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும் இருந்தாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
எனினும் இந்நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த மூன்று 16 வயது சிறுவர்கள் மற்றும் 22 வயது நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நாள்வரையும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் ஃ எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை குறித்த நால்வரையும் விளக்க மறியளின் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்





