
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது.
தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகள் மதகுருமார் பொதுமக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.