
அம்பாறை , ஏப் 16
இன்று நம் நாட்டில் ஊழலும் திருட்டும் தலைதூக்கியுள்ள கொடூரமான அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் அரச சொத்துக்களை,அரச வளங்களை கொள்ளையடிக்கும் பலிகாடாக ஆளும் குடும்பம்மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அத்தகைய நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறாது எனவும்தெரிவித்தார்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இந்தக் குடும்ப அரசாங்கமே முழுப் பொறுப்பும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டபணம் அனைத்தும் மீட்கப்படுவது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் எனவும், அத்தகைய திருடர்களுக்குதண்டனை வழங்குவது துல்லியமாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் எனவும், நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை மூலம்அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும், அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் இருபதாம் திருத்தம் மாற்றப்பட்டு, பத்தொன்பதாவதுதிருத்தத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இந்நாட்டில் போராடும் அனைத்து மக்களின்பெயராலும் அதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவர்களின் கோரிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் முழு உடன்பாடு கொண்டவைஎன்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் குரலாக ஐக்கிய மக்கள் சக்தி நடைமுறை ரீதியாகநிலை கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் கட்சி சார்பற்ற போராட்டத்திற்கு தனது முழுஆதரவும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான கேவலமான ஆட்சியை இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஜனநாயகப்போராட்டம் இடைவிடாது தொடரும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிற்கு ஜனநாயக ரீதியானவெற்றிகளை பெற்றுக் கொடுப்பதில் தான் உறுதியாக அர்ப்பணிப்புச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வரிசைகளுக்கு மேல் வரிசைகள் இருந்தாலும், விமானங்களை கொள்வனவு செய்ய,இறக்குமதிசெய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதிவேக வீதிகளை அமைப்பதன்மூலம் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள்சக்தியிலிருந்து ஓர் மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜனசுவய’ திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 48 ஆவது கட்டமாக, இருபத்து ஒரு இலட்சத்து முப்பத்து நான்குஆயிரம்
(ரூ.2,134,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் பிரகாரம்,
*ரூபா 169,000 பெறுமதியான Pulse Oximeter இயந்திரங்கள் இரண்டும்,
*ரூபா 375,000 பெறுமதியான Multipara Monitor இயந்திரங்கள் இரண்டும்,
*ரூபா 420,000 பெறுமதியான ECU Bed ஒன்றும்,
*ரூபா 626,400 பெறுமதியான Auticlav இயந்திரம் ஒன்றுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாகநிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கியமக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தைநடைமுறைப்படுத்துகின்றனர்.
இது வரை 47 கட்டங்களில் 1268 இலட்சம் (126,863,500) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனைஉபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.