மகள் உண்ணாமல் இருக்கிறாள்; வீட்டிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்! – உணர்ச்சிவசப்பட்ட இராஜாங்க அமைச்சர்

“எனது மகள் உண்ணாமல் இருக்கிறாள் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்” என புதிய விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி நாடாளுமன்றக் குழு அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக மாறத் தீர்மானித்த போதிலும், சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக சுகந்திர கட்ச்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த வியாழன் மஹரச்சிமுல்லவில் புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக தனது மகள் எதையும் உண்ணாமல் இருப்பதால், தனது வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *