
வாஷிங்டன், ஏப் 16
அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச பயணங்களுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அந்த நாடு தொடர்ந்து அமலில் வைத்துள்ளது.
அந்த வகையில் கொரோனா பாதிப்புள்ள நாடுகளை 4 வகையாக பிரித்துள்ள அமெரிக்கா, நிலை 4 பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்தவாரம் முதல் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி நிலை 4 பட்டியலில் இருக்கும் பல நாடுகள் நிலை 3-ல் இருந்து நிலை 1-க்குள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் சர்வதேச பயணத்தின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க குடிமக்கள் சிறந்த தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.