வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் ராஜபக்ஷ அரசாங்கம் என்கின்றார் சஜித்

வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பல்வேறு நாடுகளில் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணையை நிறைவேற்றி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சி செய்யப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை ஸ்தாபிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *