
விட்டுக்கொடுப்பின்றி செயல்படுவது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை புதிய அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.
சொத்துக்களை சேர்த்துக்கொண்டு அதனை அர்ப்பணிப்பதற்கோ பிறருக்கு வழங்குவதற்கோ முடியாமல் எமது வாழ்க்கையை நாம் துன்பப்படுத்துகின்றோம்.
விட்டுக்கொடு என புனித பைபில் எடுத்துறைக்கின்ற நிலையில், அதனை சிலர் அடியொற்றாமையே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.