கொழும்பு, ஏப் 16
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 1200 பேருக்கான இருக்கைகளுடன் கூடிய மண்டபத்தில் முழுக்க ஆதரவாளர்கள் திரளுவார்கள் என சுமந்திரன் அறிவித்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு வெறும் 57 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.
கோ ஹோம் கோட்டா, என கூட்டமைப்பு அழைப்பு விடுத்த கூட்டம், குறைந்தளவானவர்களே பங்குபெற்றதால், ‘கம் ஹோம் கோட்டா’ கூட்டமாக மாறியுள்ளதாக அங்குள்ளவர்களே நகைச்சுவையாகக் கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் குறைவாக மக்கள் கலந்து கொண்டது, கோ ஹோம் கோட்டா என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் உண்மையில் ஏற்றுக் கொண்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

