கைதடியில் 4 இலட்சம் பெறுமதியான முதிரை குற்றிகள் மீட்பு!

சட்டவிரோமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட முதிரை குற்றிகள் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.

வட்டா ரக வாகனம் ஒன்றில் தேங்காய்களினால் மறைத்து முதிரைக் குற்றிகள் எடுத்துச் செல்லப்பட்டபோதே யாழப்பாணம் கைதடி பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் விசேட பொலிஸ் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட 8 முதிரைக் குற்றிகளின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *