
கடவத்தை, ஏப் 16
கடவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் பணப் பெட்டகத்தை உடைத்து ரூ. 2.7 கோடி பணத்தை கொள்ளைச் சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் 32 வயதானவர் எனவும் குருணாகல் பகுதியைச் சேர்ந்தவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த நபர் வங்கிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.