
கொழும்பு, ஏப் 16
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.