
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் ஏழாம் நாளான நேற்றையதினம் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரையில் போராட்டத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று இளைஞர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்
1- உடன் நடைமுறைக்குவரும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும்.
2- பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவிவிலக வேண்டும்.
3- அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.
4- இடைக்கால அரசை அமைத்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
5-ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.
என்பனவற்றையே தமது ஐந்து அம்சக் கோரிக்கைகளால் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் எவ்விதமான விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தொடரும் என்றும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.