
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் போது நேற்றிரவு இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியவும் போராட்டக் களத்தில் இணைந்து கொண்டார்.