
கொழும்பு, ஏப் 16
அரசியல்கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு உரிமை கோரமுயல்கின்றன என்பதோடு பொதுமக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய பல தருணங்கள் உள்ளன எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் துமிந்த திசநாயக்க கூறியதாவது,
காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும்.
அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசியல்கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு உரிமை கோரமுயல்கின்றன என்பதோடு பொதுமக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய பல தருணங்கள் உள்ளன. மேலும் மக்கள் தற்போது மாற்றத்தை கோருகின்றனர் எனவும் குறிப்பிட்டார் .