போராட்டக்களம் சென்று பேராதரவு வழங்குங்கள்!

‘அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு- காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலிலேயே கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே, வடக்கு, கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும்’ – என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *