மேலும் ஒரு எரிவாயு நிறுவனம் ஆரம்பித்தல் குறித்து கலந்துரையாடல்

அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதன் சந்தை பெயரில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

சக்திவலு அமைச்சின் கீழ் இயங்கும் கனியவள கூட்டுத்தாபனத்தின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பில் கனியவள கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எரிவாயு நிறுவனத்தின் சாத்தியகூறுகள் குறித்து ஆராயப்படுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *