நீர்வெறுப்பு நோயால் குடும்பத்தலைவர் சாவு!

தெருநாய் மற்றும் பூனையின் நகக்கீறல் காரணமாக நீர்வெறுப்புக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் விலங்கு விசர்நோய்த் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதமைதான் உயிரிழப்புக்கான காரணம் என்று சட்டமருத்துவ வல்லுநரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற நபரே உயிரிழந்தார். 2 மாதங்களுக்கு முன்பு பூனையும் அவருக்கு நகங்களால் கீறியுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கிருந்தபோது அவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *