
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி 16 நபர்கள் (கைக்குழந்தை உட்பட) கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு வரும் இலங்கைத் தமிழர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.