
திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
புல்மோட்டை கரையாவெளி ஆற்றிற்கு இறால் பிடிப்பதற்காக சென்றபோதே மின்னல் தாக்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் புல்மோட்டை நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடையவரும், புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
குறித்த இருவரின் சடலங்களும் சம்பவ இடத்தில் தற்பொழுது காணப்படுகின்றது.
விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.