ரயிலுடன் கார் மோதியதில் ஒருவர் சாவு – இருவர் காயம்!

பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் ரயில் கடவை பகுதியில் நேற்று இரவு ரயிலுடன் கார் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.

கட்டுகஸ்தோட்ட பகுதியில் இருந்து கெலிஒயா நகரில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு வந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் காரில் பயணித்த போது கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற ரயிலுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் பேராதெனிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 56 வயதான தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெணிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *