ஆளும் கட்சியின் விசேட கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது: வெளியான தகவல்

ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று விரைவில் நடைபெறவுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைமைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.எதிர்வரும் நாட்களில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளது.அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் திகதி என்பன பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *