மண்வெட்டியால் அடித்து ஒருவர் கொலை!

மஹவெல – தெல்கொல்ல பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய தெல்கொல்ல, கனேகெதரவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் முன்னாள் கணவரின் மகன் அவரைத் தாக்கியதாகவும், அவர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *