‘கோட்ட கோ காம’வில் 4ஜி கோபுரம் உளவுப் பிரிவினரின் ஏற்பாடா? – வெளியாகிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடலுக்கு அருகில் (கோட்ட கோ கம) 4G கைத்தொலைபேசி அலைக்கற்றை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் தொகைபேசி அலைக்கற்றை கோபுரத்தை அமைத்தது யார்? என்பதை கண்டறியுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு அந்த வீடியோவில் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்ட இடத்திற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் போராட்ட மண்டலத்தில் நடக்கும் அனைத்து தகவல்களையும் பெற புலனாய்வு பிரிவுகள் முயற்சிப்பதாக தகவல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *