‘கோட்ட கோ கம’ இரண்டாவது கிளை நாளை திறப்பு.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி ஆர்ப்பாட்டக் காரர்களால் கோட்டா கோ கம என்ற பெயருடன் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து இரவு பகல் பாராது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாளையதினம்(17) காலை 9.00 மணிக்கு கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா (டோரிங்டன்) பூங்காவில் கோட்டகோகமகிளை ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *