
கொழும்பு, ஏப் 16
தனியார் பஸ்களை நடத்துனர்களின்றி இயக்குவதற்கான யோசனையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், நடத்துனர்களுக்கு வேதனத்தை வழங்குதற்கான செலவை மீதப்படுத்தும் நோக்கில், இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகள், முற்கொடுப்பனவு அட்டை அல்லது கைத்தொலைபேசி செயலி மூலம், பஸ் பயணக் கட்டணத்தை நேரடியாக பேருந்து உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடும் முறைமையைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.