தமிழ் மக்களுக்கு பலமான தலைமை விரைவில் அமையும்- சிறீகாந்தா.

யாழில் இன்று இடம்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவித்துள்ளார்:

மூன்று மணித்தியாலங்கள் எமது கூட்டம் நீடித்தது.இதில் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதிலே கூட்டாக சேர்ந்து நாம் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒவ்வொரு கட்சி ,சமூக அமைப்புகளிலிருந்து ஒருவர் வீதம் இந்த செயற்பாட்டுக் குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

மீண்டும் நாம் செய்வாய்க் கிழமை கூடவுள்ளோம்.10 தமிழ் அரசியல் கட்சிகள் இதில் கலந்து கொண்டனர்.மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இது.

ஆகவே எமது இனத்தின் விடிவுக்காக நாம் எல்லோரும் சேர்ந்து செயற்பட வேண்டும்.ஒரு தலைமை தேவைப்படுகிறது.அதை தனித்து நின்று வழங்க முடியாது.

ஆகவே ஒன்றாக சேர்ந்து அந்த பலத்தை வழங்கவுள்ளோம்.எல்லா கைகளும் இணைந்தால் மட்டுமே பலமாக அமையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *