சிறப்பாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்!

கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.

இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இதனை யாழ் . மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன் ராஜ் அவர்கள் நடாத்திவைத்தார்.

தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று “யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்” என்னும் தலைப்பிலான சிறப்பு கூட்டுப்போதனையும் இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, கிளிநொச்சியிலும் அனைத்து திருச்சபைகளிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் நீங்கி உயிர்த்த இயேசுபிரான் நாட்டை ஆசீர்வதிக்க வேண்டும் என வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் வழிபாடு இன்று காலை இடம் பெற்றது. திருப்பலியை வண பிதா ஜோன் தேவசகாயம் ஒப்புக் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *