சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் – ரஷ்யா

சில மணி நேரத்தில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விட்டுச் சென்றால்.அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க் கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின்படி நடத்தப்படுவார்கள் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த ஒப்பந்தத்தின் விவரங்களை உக்ரேனியர்களுக்கு ரஷ்யப் படைகள் ஒரே இரவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் உக்ரேனிய அதிகாரிகள் இந்த வாய்ப்பை ஏற்கத் திட்டமிட்டதற்கான எந்த அறிகுறியையும் கொடுக்கவில்லை என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *