இயேசு கிறிஸ்து நாதரின் உயிர்ப்பு தின நள்ளிரவு ஆராதனைகளும், திருப்பலி பூஜைகளும் நேற்றிரவு புத்தளம் சாந்த மரியா கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், அவர்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்தும் , பொருளாதார நெருக்கடியிலிருந்தும் நாடும், நாட்டு மக்களும் பாதுகாப்பு பெற வேண்டும் எனவும் பிராத்தனைகளும் செய்யப்பட்டது.
புத்தளம் பங்குத் தந்தை அருட்திரு பயஸ் கெனடி பர்னாந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தார்.
இதன்போது, பரிசு மற்றும் உணவு பரிமாற்றம் என்பனவும் இடம்பெற்றன.
இந்த வழிபாட்டில் புத்தளம் பங்குத் தந்தை அருட்திரு பயஸ் கெனடி பர்னாந்து உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பக்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதேநேரம் புத்தளம் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் தேற்றிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
மேற்படி ஆராதனைகளின் போது தேவாலயங்களில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


