
வலையமைப்பு நெரிசலுக்குத் தீர்வாக காலிமுகத்திடலில் நேற்றுமுன்தினம் புதிதாக நிறுவப்பட்ட 20 அடி தொலைத்தொடர்பு கோபுரத்தை, அதற்குப் பொறுப்பான தொலைத்தொடர்பு நிறுவனம் நேற்று அகற்றியுள்ளது.
‘காலி முகத்திடலில் திறன் மேம்படுத்தல் தீர்வு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பியுள்ள கவலைகளை கருத்திற் கொண்டும், அதற்கு மதிப்பளிக்கும் வகையிலும் தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றிக் கொள்ள முடிவு எடுத்துள்ளோம்.
காலி முகத்திடல் பகுதியில் வலையமைப்பு நெரிசல் அளவைக் குறைப்பதே மேற்படி கோபுரம் நிறுவப்பட்டதன் ஒரே நோக்கமாகும். தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அந்தப்பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதற்காக எமது நிறுவனம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதை மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கின்றோம்’ என்று அந்த நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தக் கோபுரம் போராட்டக்காரர்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்டதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.