
நாடு முழுவதும் பெற்றோல் உட்பட அனைத்து எரிபொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நாளை திங்கட்கிழமை முதலே எரிபொருள் விநியோகம் சீராகும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் பவுஸர் பணியாளர்கள் புத்தாண்டு விடுமுறையில் சென்றிருப்பதாலேயே தற்போதைய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அது நாளை திங்கட்கிழமை முதல் சீராகும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.