சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் ஆராதனை இடம்பெற்றன

கடந்த 2019ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவலாயத்தில் உயித்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத அமைப்பால் தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்ததுடன் தேவலாயம் பாதிப்படைந்து.

இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்திவேண்டி ஆராதரனையும் முன்னேடுக்கப்பட்டன .

இதேவேளை மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *