போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப்போவதில்லை – பாதுகாப்பு அமைச்சு

அமைதியான போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவம் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்களை அடக்க இராணுவம் களமிறக்கப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதனை விளக்கி அறிக்கை ஒன்றின் ஊடாக பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *