மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தின விசேட ஆராதனை!

மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் ஈஸ்டர் விசேட ஆராதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதரனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ம் திகதி சியோன் தேவலாயத்தில் ஈஸ்டர் தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தது.

இந்தத் தாக்குதலினால், தேவலாயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்திவேண்டி ஆராதரனையில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *