
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்தார்.