
தனது சொத்துக்களை கணக்காய்வுக்கு உட்படுத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வெளிப்படைத்தன்மையாக இன்று அறிவித்துள்ளார்.
இதற்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், திணைக்கள தலைவர்களும் முன்வரவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.