பொலிஸாரின் கெடுபிடியை மீறி காலியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கூடாரம்! (வீடியோ இணைப்பு)

காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக, பொலிஸாரால் இன்று காலை அகற்றப்பட்ட போராட்டக் கூடாரம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் இடம்பெறும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் காலியில் இன்று காலை கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

இதை அறிந்த பொலிஸார் கூடாரங்களை கிழித்து எரிந்த நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சட்டத்தரணிகள் சிலர் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய அனுமதிகளைப் பெற்ற பின் தற்போது அதே இடத்தில் போராட்டக்காரர்களால் மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *