
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை நாளை ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.