
நாட்டின் அனைத்து குடிமக்களும் தலா 10 லட்சம் ரூபாய் கடனாளிகள் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகமாக தான் அறிக்கை வெளியிடும் போது தனி நபர் கடனானது 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடு செய்யவே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் மொத்த கடன் 20 ட்ரில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதன் சரளமான அர்த்தம் முழு பொருளாதாரமும் விழுங்கப்பட்டுள்ளது என்பதாகும். நாடு இந்த இடத்திற்கு தள்ளப்பட பிரதான காரணம் 2015 ஆம் ஆண்டு நடந்த மத்திய வங்கியின் கொள்ளை.
அதேவேளை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் ஒரு டொலருக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அந்த பணம் நியாயமான முறையில் செலவிடப்பட வேண்டும் என்பன அந்த நிதியத்தின் அடிப்படை நிபந்தனைகள்.
அப்படி செய்யவில்லை என்றாால், சர்வதேச நாணய நிதியம் எவ்வித கடன்களையோ நிதியுதவிகளையோ வழங்காது எனவும் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.