
காலிமுகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாட இளைஞர்களினால் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்று பிற்பகல் 4.30 மணிக்கு தமிழில் தேசிய கீதம் பாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிங்கள மொழி பேசுவோருக்கு தமிழில் தேசிய கீத வரிகள் மொழி பெயர்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.