நாளை முதல் 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு?

நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய திங்கட்கிழமைநான்கு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட வேண்டும் என்றும், செவ்வாய் (19) மற்றும் புதன்கிழமைகளில் (20) நான்கு மணித்தியாலங்கள் மற்றும் ஐம்பது நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு முறை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதனால், பகலில் மூன்று மணி நேரம் இருபது நிமிடம் மின்தடையும், இரவில் ஒரு மணி நேரம் முப்பது நிமிடமும் மின்தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *