
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸூம் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூம் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த ஓட்டோவும் ஆரையம்பதி பாலமுனை சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோ சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்ககள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.