கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்க இளைஞர் யுவதிகள் இணைந்து போராட்டம் முன்னெடுப்பு!

கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்துக்கு முன்பாக கத்தோலிக்க இளைஞர், யுவதிகள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அவர்களுடன் கத்தோலிக்க திருச்சபையில் பல ஆலய பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தைகள் இளைஞர் யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராகவும் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புனித லூசியாஸ் தேவாலயத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி காலிமுகத்திடலுக்கு செல்வதற்கு ஆயுத்தமாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *