இலங்கையின் பொதுப் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்கொரியாவிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிட்டினி நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

