
மட்டக்களப்பின் கிரான்குள பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் எரிவாயு சிலிண்டருடன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை குறிக்கும் விதமாக போட்டியாளர்கள் எரிவாயு சிலிண்டரை தோலில் சுமந்தவாறு ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.