
வாழைச்சேனை – வாகனேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி கிணற்றில் குடிநீர் எடுக்க சென்ற போது குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.