
அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
பொறுப்பேற்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்த்குமாருக்கும் அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செய்தியில், அந்த தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இதுவரை அரச தரப்பிலிருந்து இந்த விடயம் குறித்து, எவ்வித அழைப்புகளும் விடுக்கப்படவில்லை.
எதிர்க்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பனவற்றுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நான் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சி குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றில் முன்வைக்கும் போது, தமது கட்சி கூடி அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் அறிவிக்கப்படும்.