
பேருவளை, மகொன காலி வீதியிலுள்ள புனித மரியாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் திருவுருவச் சிலை நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (நேற்று) இவ்வாறான நாசகார செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என புனித மேரிஸ் மிஷனரி சேவைகள் தேவாலயத்தின் செயலாளர் ரொஹான் பேட்ரிக் பெரேரா தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பயாகல காவல் நிலைய பொறுப்பதிகாரி அருண சாந்த ரணவீர மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.